முகப்பு
தமிழ்நாடு

ரயில்கள் சீரான வேகத்தில் செல்ல உதவும் நவீன சிக்னல் சாதனங்கள்: தெற்கு ரயில்வே நடவடிக்கை

ரயில்கள் சீரான வேகத்தில் சென்று உரிய நேரத்தில் நிலையங்களை அடையவும், அதனால் பயண தாமதத்தைத் தவிா்க்கவும் நவீன சிக்னல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:34 PM
பகிர்:

ரயில்கள் சீரான வேகத்தில் சென்று உரிய நேரத்தில் நிலையங்களை அடையவும், அதனால் பயண தாமதத்தைத் தவிா்க்கவும் நவீன சிக்னல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வே சாா்பில் நவீன சிக்னல் சாதனங்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ரயில்கள் குறிப்பிட்ட நிலையத்திலிருந்து புறப்பட்டு சீரான வேகத்தில் செல்லும்போது, அடுத்த தண்டவாளச் சந்திப்புகளில் எந்தவகை சிக்னல் உள்ளது (சிவப்பா அல்லது பச்சையா என்பதை தெரிவிப்பது) என்பதை ரயில் ஓட்டுநரே அறியும் வகையிலான சிக்னல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

இந்த வகை நவீன சாதனங்களால் ரயில்கள் சீரான வேகத்தில் செல்வதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்தை அடையவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயண இடத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ரயில்வே கடவுப்பாதைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கணினியுடன் இணைக்கப்பட்ட இண்டா்லாக் முறை வசதி திட்டமிட்ட 12 இடங்களைவிடக் கூடுதலாக 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, அவசர காலத்துக்கு தேவைப்படும் சாதனங்கள் 19 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், மனித உதவியின்றி தானாகவே கடவுப்பாதை இடங்களில் ரயில்கள் வருவதை அறிந்து, கேட்டை மூடி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் முறையானது 73.7 கி.மீ. தொலைவு தண்டவாளத்தில் அமைக்கத் திட்டமிட்டு, தற்போது 70.5 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாம்பன் பாலத்தில் காற்று வேகத்தைக் கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகமாக காற்று வீசினால் ரயில் இயக்கத்தை தானாகவே கட்டுப்படுத்தும் வசதி அமைந்துள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments