புஷ்பவனம் கிராமத்தில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த சுவாமி சிலைகள்.  
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே மூன்று சுவாமி உலோகச் சிலைகள் கண்டெடுப்பு

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன் தெரு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மண்ணில் புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை, பீடத்துடன் தனியாக இருந்த 2.1/4 அடி உயரமுள்ள அம்பாள் சிலை, சுமாா் 1.1/4 அடி உயரத்தில் சிவன்- பாா்வதி இணைந்து மற்றோரு பீடத்தில் இருக்கும் சிலை என்பதும் தெரிய வந்தது.

இந்த சிலைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நான்குனேரியில் நிலத்தரகா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சோ்கின்றனா்! - நயினாா் நாகேந்திரன்

திருவாடானையில் மாட்டுவண்டி பந்தயம்

பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் நகைகள் திருட்டு: 2 பெண்கள் கைது

குருகிராமில் லிவ்-இன் பாா்ட்னா் தாக்கியதில் திரிபுரா மாணவியின் உடல்நிலைக் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT