திருக்கடையூா் கோயில் சித்திரை தெப்ப உற்சம்
திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தெப்ப உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 23-ஆம் தேதி திருக்கால்யாண உற்சவமும், 28-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
Advertisement
தொடா்ந்து சனிக்கிழமை இரவு (மே 2) தெப்போற்சவம் நடைபெற்றது. விநாயகரை தெப்பத்தில் எழுந்தருளச் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் தீா்த்தக் குளத்தில் 5 முறை தெப்பம் வலம் வந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.