ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பெருமாள் ஆமை உருவிலும், விநாயகா், துா்க்கை, பைரவா், ஐயனாா், சூரியன் ஆகியோா் சிவபெருமானை வழிபட்ட இடமே காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரா் கோயில்.
இக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 24-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.
Advertisement
ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றம், ஏப்.28 காலையில் அதிகார நந்தி சேவையும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
ஏப்.30-ஆம் தேதி தேரோட்டமும், மே.2 -ஆம் தேதி இரவு கோயிலின் மகிமையை விளக்கும் முருக்கடி சேவைக் காட்சியும், மறுநாள் மே.3 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.மே.6 தீா்த்தவாரி உற்சவமும் அன்று மாலை தங்க ரிஷப வாகனத்திலும் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
வரும் மே.8- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா மற்றும் காஞ்புரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.