காரைக்கால்

பொறுப்பேற்பு

DIN

காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளராக எஸ்.சேகர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றிய வி. சண்முகசுந்தரம், பதவி உயர்வு பெற்று புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராகப் பொறுப்பேற்றார். இந்த இடம் காலியாக இருந்த நிலையில், கடந்த நவ.16-ஆம் தேதி செயற்பொறியாளராக (நீர்ப்பாசனம்) பணியாற்றி வந்த ஜி. இளஞ்செழியன் பதவி உயர்வுபெற்று கண்காணிப்புப் பொறியாளராக காரைக்காலில் பொறுப்பேற்றார். இவர் கடந்த நவ.30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், புதுச்சேரியில் செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்த எஸ். சேகர் காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று வியாழக்கிழமை பொறுப்பேற்று, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதி பெறப்பட்டு பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகள் செய்ய விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், காரைக்காலில் சாலைகள் புதுப்பிக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT