காரைக்கால்

பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

DIN

காரைக்கால் அருகே பெண்ணிடம் தகராறு செய்ததாக திங்கள்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அருகே உள்ள தென்பாதிபேட் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (எ) ராஜ்குமார் (48). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நெடுங்காடு கடைத்தெருவில் நின்று, பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த போலீஸார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜாமீனில் விடுவித்தனர். இதைத்தொடர்ந்து, தனது வீட்டுக்குச் சென்ற பாபு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வேம்பு (38) என்ற பெண்ணைத் தகாத வார்த்தையால் பேசியதுடன் அவரை மானபங்கம் செய்ய முயற்சித்தார். 
இதுகுறித்து வேம்பு அளித்த புகாரின்பேரில், நெடுங்காடு போலீஸார் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT