முகப்பு
காரைக்கால்

தொழிலாளர் அலுவலருக்கு பணி ஓய்வுப் பாராட்டு

காரைக்கால் தொழிலாளர் அலுவலர் பணி ஓய்வு பெறுவதையொட்டி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

Updated On : 29 மார்ச், 2018 at 9:30 AM
பகிர்:

காரைக்கால் தொழிலாளர் அலுவலர் பணி ஓய்வு பெறுவதையொட்டி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 
காரைக்கால் தொழிலாளர் நல அலுவலராக பணியாற்றும் வி. வில்வசேகரன் மார்ச் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், வில்வசேகரனுக்கு ஆட்சியர் ஆர். கேசவன் சந்தன மாலை அணிவித்து, நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்திப் பேசினார். 
இதில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த்ராஜா, தொழிற்சாலைகள் ஆய்வாளர் எஸ்.கே. செந்தில்வேலன், கணக்கு மற்றும் கருவூலத் துறை துணை இயக்குநர் வி.டி. தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நிறைவில், ஓய்வுபெறும் தொழிலாளர் நல அலுவலர் வி. வில்வசேகரன் ஏற்புரையாற்றினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.