காரைக்கால்

ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் காயம்

DIN


காரைக்கால் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், ஆட்டோவில் இருந்த மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காரைக்கால் வேட்டைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் அருண் (34), நேரு நகரைச் சேர்ந்த பாலமுருகன் (32) ஆகியோர் ஆட்டோவில் வேட்டைக்காரன் தெருவிலிருந்து காரைக்கால் நகரத்தை நோக்கி சனிக்கிழமை பயணித்தனர். 
ஆட்டோவை சிவானந்தம் என்பவர் ஓட்டினார். வேட்டைக்காரன் தெருவிலிருந்து பாரதியார் சாலையில் ஆட்டோ திரும்பியபோது, நாகப்பட்டினத்திலிருந்து திருக்கடையூர் நோக்கிச் சென்ற லாரி ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட அதிலிருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தோர் இவர்களை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். 
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் நாகை மாவட்டம், கச்சாநகரத்தைச் சேர்ந்த சதீஷ் (31) தலைமறைவாகிவிட்டார். காரைக்கால் நகர காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT