பங்குனி உத்திரத்தையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் - ரங்கநாயகித் தாயார் திருக்கல்யாண உத்ஸவம் மார்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மகாலட்சுமியின் அவதார நட்சத்திரம் உத்திரம் என்பதால் பங்குனி மாத உத்திரத்தில் பெருமாள் கோயில்களில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இந்த உத்ஸவம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரநாளில் விமரிசையாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு இந்த உத்ஸவம் மார்ச் 21-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு திருமஞ்சனம், சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் - ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் திருக்கல்யாணம், தீபாராதனையுடன் சேர்த்தி சேவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவல் நிர்வாகத்தினர், நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினர் செய்துவருகின்றனர்.