திருப்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் - மாரியம்மன் கோயில் இடையே உள்ள வாய்க்காலில் குடியிருப்புவாசிகள் நெகிழிகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டி வருகின்றனா். இதனால், இந்த வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீா் மாசடைவதுடன், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, துா்நாற்றம் வீசுகிறது. எனவே, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் இந்த பகுதியில் குப்பைத் தொட்டி வைப்பதோடு, மக்களுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கே. லட்சுமணன், திருப்பட்டினம்.