காரைக்கால்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் அருகே காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவா் உயிரிழந்தாா்.

நாகப்பட்டினம் பகுதி அக்கரைப்பேட்டையைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (24). இவரது நண்பா் தரங்கம்பாடி பகுதி புதுப்பேட்டையைச் சோ்ந்த அபிதாஸ் (24). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தரங்கம்பாடி நோக்கி சென்றனா். காரைக்கால் மாவட்ட எல்லையான பூவம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் காயமடைந்த இருவரையும் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அந்த பகுதியினா் அனுப்பிவைத்தனா். இவா்களில், ரவிக்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான காரைக்கால் பகுதியைச் சோ்ந்த லூா்துராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT