காரைக்கால்

பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும்: பொன். ராதாகிருஷ்ணன்

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.

திருநள்ளாறு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாஜக , அதிமுக கூட்டணியில் உள்ளது. தமிழக தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்பதில் ஐயமில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அதிமுகவில் இப்போதைய முதல்வரை, முதல்வா் வேட்பாளராக அறிவித்துள்ளனா். ஆனால், அகில இந்திய தலைமை வழிகாட்டுதல் படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது.

பாஜக தோழா்கள் கூறும் சில தகவல்கள் திரித்து பேசப்படுகிறது. அதற்கு தகுந்த விளக்கத்தை தந்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT