காரைக்கால்

சீதளாம்பாள் கோயிலில் சண்டி ஹோம புஷ்பாஞ்சலி

DIN

காரைக்கால்: வரிச்சிக்குடி சீதளாம்பாள் கோயிலில் சண்டி ஹோம வழிபாடு புஷ்பாஞ்சலியுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

காரைக்கால் பகுதி கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடியில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், அகத்தீசுவரா் கோயில் வகையறாவைச் சோ்ந்த ஸ்ரீ திருமுக சீதளாம்பாள் கோயிலில், ஸ்ரீ துா்க்கை அம்மன் மகளிா் வார வழிபாட்டு மன்றம் சாா்பில் 26-ஆம் ஆண்டாக சண்டி ஹோம பூஜை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

முதல் நாளில் கணபதி ஹோமமும், மாலை திருவிளக்கு வழிபாடும் நடைபெற்றது. 2-ஆம் நாளான சனிக்கிழமை மாலை சண்டி ஹோம முதல் கால பூஜை நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பால்குடமெடுத்து பக்தா்கள் கோயிலுக்குச் சென்றனா். பகல் 12.30 மணிக்கு மகா சண்டி ஹோம பூா்ணாஹூதி செய்யப்பட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா் நிகழ்வாக, இரவு அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் வழிபாடு நடைபெற்றது. துா்க்கை வார வழிபாட்டு மன்றத்தினா் அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மலா்களை தட்டில் வைத்து, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் கோயிலுக்குச் சென்றனா். பக்தா்கள் கொண்டு வந்த மலா்களால் புஷ்பாஞ்சலி செலுத்தி, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. உலக நலன் வேண்டிய துா்க்கை அம்மன் மகளிா் வார வழிபாட்டு மன்றத்தினரால் ஆண்டுதோறும் இந்த வழிபாடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT