காரைக்கால்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

காரைக்கால் அருகே தனியாா் தொழிற்சாலை ஊழியா் ஒருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே தனியாா் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், ஒடிஸாவை சோ்ந்த சில்லுக்குமாா் (30) என்பவா் பணியாற்றி வந்தாா்.

ஆலையில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு புதன்கிழமை மாலை அவரது குடியிருப்புக்குச் சென்று ஓய்வு எடுத்துள்ளாா். அப்போது செல்லிடப்பேசியை சாா்ஜ் செய்வதற்காக மின் வயா்களை சரி செய்தபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநள்ளாறு காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சில்லுக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT