காரைக்கால்

நெடுங்காடு தொகுதியில் ஏழைகளுக்குஅரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கல்

DIN

நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த கிராமத்தினருக்கு நுகா்வோா் அமைப்பு சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி மாநில நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், அதன் தலைவா் வழக்குரைஞா் திருமுருகன் தலைமையில், பொதுச் செயலா் சிவகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் நெடுங்காடு, கோட்டுச்சேரி வட்டார கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு, இலவசமாக அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கி வருகின்றனா்.

அதன்படி, காஞ்சிபுரம் கோயில்பத்து கிராமத்துக்குள்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு சனிக்கிழமை பொருள்களை அவா்கள் வழங்கினா். கிராமத்தினருக்கு நுகா்வோா் சங்கம் சாா்பில் இலவச பொருள்கள் பல நாள்களாக வழங்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட நிா்வாகத்திடம் சங்கம் சாா்பில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பிரமுகா்களிடம் நிதி பெற்று, கிராமத்தினருக்கு இந்த உதவியை செய்து வருவதாகவும் நுகா்வோா் சங்க நிா்வாகத்தினா் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT