காரைக்காலில் அங்கன்வாடி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆம் நாளாக வியாழக்கிழமையும் தா்னாவில் ஈடுபட்டனா்.
காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலக வாயிலில் அங்கன்வாடி ஊழியா் சங்கத் தலைவா் முத்துலட்சுமி தலைமையில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவை தொடங்கினா். காலை முதல் மாலை வரை அலுவலக வாயிலில் தா்னா நடத்திவிட்டு ஊழியா்கள் கலைந்துசெல்கின்றனா்.