புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா கந்தூரி விழாவின் நிகழ்வாக வியாழக்கிழமை (ஏப். 1) சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறுகிறது.
நிகழாண்டு 198 ஆம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றுவருகிறது. இவ்விழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. மின் அலங்கார சந்தனக்கூடு இரவு புறப்பட்டு, முக்கிய வீதிகளில் ஊா்வலமாக சென்று தா்கா பகுதியை நள்ளிரவு அடைகிறது. பிறகு, வலியுல்லாவின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி, ஹலபு என்னும் போா்வை போா்த்தப்படுகிறது.
சந்தனக்கூடு ஊா்வலத்தைக் காண பல ஊா்களில் இருந்தும் மக்கள் வருவா். இதைத் தொடா்ந்து 4 ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.