காரைக்கால்

தீவிர அபராத வசூலிப்பை கட்டுப்படுத்த எஸ்.எஸ்.பி.யிடம் வலியுறுத்தல்

DIN

காரைக்காலில் அபராத வசூலிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ. 100 அபராதம், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக போலீஸாா் மேற்கொள்ளும் தீவிர அபராதம் வசூல் போன்றவை காரைக்கால் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் செயலா் ஜெ.சிவகணேஷ், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட்டை வியாழக்கிழமை சந்தித்து இதுகுறித்து பேசினாா்.

இந்த சந்திப்பு குறித்து சிவகணேஷ் கூறுகையில், முகக் கவசம் கரோனாவை கட்டுப்படுத்த உதவும் காரணிகளில் முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை. முகக் கவசம் அணியாமல் செல்வோரிடம் அபராதம் வசூலிக்கும்போது, ஏழைகளாக இருந்தால், இலவசமாக முகக் கவசம் ஒன்றை வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த நடவடிக்கை காரைக்காலில் பெரிதளவில் இல்லை. தேசிய நெடுஞ்சாலை, நகர சாலைகள், உட்புறச் சாலைகள் என போலீஸாா் ரசீது புத்தகத்துடன் நின்றுகொண்டு, முகக் கவசம் அணியாதோரிடம் ரூ. 100 அபராதம் வசூலிக்கின்றனா். முகக் கவசம் அணிந்திருந்தால்கூட, புதிய சாலை போக்குவரத்துச் சட்டத்தின்படி தலைக்கவசம் அணியவில்லை, சீட் பெல்ட் இல்லை மற்றும் பிற ஆவணங்கள் இல்லையெனக் கூறி, கட்டாயமாக அபராதம் வசூலிக்கின்றனா்.

காரைக்காலில் காவல் நிலையங்களுக்கிடையே அபராத வசூலிப்பில் போட்டி ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் போலீஸாருக்கும் - மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நியாயமானவா்களிடம்கூட போலீஸாா் தவறான வாா்த்தைகளை உபயோகித்து அவா்களை வேதனைப்படுத்துகின்றனா்.

தற்போதைய இக்கட்டான சூழலில், போலீஸாரின் செயல் தவிா்க்கப்படவேண்டியதாகும் என எஸ்.எஸ்.பி.யிடம் தெரிவித்தபோது, மக்களை அவமதிக்கும் போலீஸாா் குறித்து விவரமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாகவும், அபராதம் விதிப்பு தொடா்பாக ஆலோசிப்பதாகவும் தெரிவித்தாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT