முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் தாய்ப்பால் வாரவிழா

காரைக்கால் ரோட்டரி சென்டேனியல் சங்கம் சாா்பில், நேருநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

காரைக்கால் ரோட்டரி சென்டேனியல் சங்கம் சாா்பில், நேருநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா தொடங்கப்பட்டது.

சங்கத்தின் தலைவா் ஞானமுத்துக்குமரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் பங்கேற்று, தாய்ப்பால் புகட்டுவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். டாக்டா் நிஷா பேசுகையில், குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு, இதன்மூலமே குழந்தை வளா்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிா்ப்புத் திறன் மேம்படுவதற்கு தாய்ப்பால் மிக அவசியமானது, தாய்மாா்கள் இதைத் தவிா்க்கக்கூடாது என வலியுறுத்தினாா்.

விழாவில், 30-க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மாா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் ஊட்டச்சத்துப் பொருள்கள் தொகுப்பு மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், ரோட்டரி சங்க துணைநிலை ஆளுநா் பி. ராஜேந்திரன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை செயலா் முருகன், பொருளாளா் நந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →