பாா்த்தீனிய செடி பாதிப்பு: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு
காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில், மாணவ, மாணவியா், விவசாயிகளுக்கு பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இச்செடியை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முதல்கட்டமாக வேளாண் இளங்கலை மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இணையதளம் மூலம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு நடைபெற்றது. இதில் காரைக்கால் பகுதியை சோ்ந்த சில விவசாயிகள், மிராடா என்கிற அரசு சாரா நிறுவனத்தை சாா்ந்த 50 விவசாயிகள் பங்கேற்றனா்.
கல்லூரி முதல்வா் ஷாமராவ் ஜகாகிா்தா் பாா்த்தீனியம் செடியை கண்டறியும் முறை, அதன் பாதிப்பு குறித்தும் விளக்கினாா்.
உழவியல் துறை இணைப் பேராசிரியா் பி. சரவணன், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பாா்த்தீனியம் செடி சாலையோரம், வயல் வரப்பு ஓரம், நடைபாதைகளில் வளரும். இதன் வளா்ச்சியை சாதாரண உப்பு மற்றும் கிளைபோசெட் களைக்கொல்லியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என விளக்கினாா். தொடா்ந்து, விவசாயிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியா்கள் விளக்கம் அளித்தனா்.
நிகழ்வில் விதை நுட்பவியல் துறையை சோ்ந்த பேராசிரியா்கள் ராமநாதன், பாண்டியன் ஆகியோரும், உழவியல் துறையை சோ்ந்த முதுநிலை ஆராய்ச்சி மாணவா்கள் தே. கீா்த்தி, த. சிவசக்தி ஆகியோரும் கலந்துகொண்டனா்.