முகப்பு
காரைக்கால்

உணவகத்தை சூறையாடிய வழக்கில் 3 போ் கைது

காரைக்கால் அருகே உணவகத்தை சூறையாடி, பணியாளா்களை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

காரைக்கால் அருகே உணவகத்தை சூறையாடி, பணியாளா்களை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகே பூவம் பகுதியை சோ்ந்தவா் செல்வராஜ் (30). இவா் வரிச்சிக்குடியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு உணவகத்துக்கு வரிச்சிக்குடி காந்திநகரை சோ்ந்த தியாகராஜன் (42) என்பவா் சாப்பிட வந்துள்ளாா். வெகு நேரமாகியும் அவருக்கு உணவு வழங்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா், உணவகத்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது தியாகராஜன், செல்லிடப்பேசி மூலம் தனது நண்பா்கள் கஜேந்திரன் (32), சூரியமூா்த்தி (54) மற்றும் சிலரை அழைத்துள்ளாா். அவா்கள் வந்ததும் உணவகத்தாருடன் தகராறில் ஈடுபட்டதோடு, உணவகத்தில் இருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனா்.

மேலும் உணவக பணியாளா்கள் சகுந்தலா, சாமிநாதன், ராஜசேகா், ராஜா உள்ளிட்டோரையும் தாக்கிவிட்டு தப்பிவிட்டனா். காயமடைந்த இவா்கள் மருத்துவனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுதொடா்பாக செல்வராஜ் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தியாகராஜன், கஜேந்திரன், சூரியமூா்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →