காரைக்கால்

புதுச்சேரி துணைநிலை ஆளுநரைதிரும்பப் பெறக் கோரி கையெழுத்து இயக்கம்

DIN

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடியை திரும்பப் பெறக் கோரி, காரைக்காலில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

புதுச்சேரியின் நலனையும், தனித்தன்மையையும் காப்போம், மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் ஏற்காமல், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்துவரும் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி, மக்களிடம் கையெழுத்துப் பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கும் வகையில் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

காரைக்கால் தெற்குத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று, வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெற்றனா்.

மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். இதில், திமுகவினா் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT