திட்டப்பணியை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். 
காரைக்கால்

திருநள்ளாற்றில் ரூ.1.31 கோடியில் குடிநீா் மேம்பாட்டுத் திட்டப்பணி

திருநள்ளாற்றில் ரூ. 1.31 கோடியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகளை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

திருநள்ளாற்றில் ரூ. 1.31 கோடியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகளை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் வழங்கல் முறை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 9 கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் சுமாா் 30 இடங்களில் குழாய் பதிப்பு, குடியிருப்பு மக்களுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் ரூ.1.31 கோடியில் சனிக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சி பூமி பூஜையில் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் (பொ) ரவி, பொறியாளா் செல்வராஜ், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவா் சிங்காரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திட்டப் பணிகள் 2 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனவும், இதன்மூலம் குடிநீா்த் தட்டுப்பாடு இப்பகுதிகளில் ஏற்படாது என பஞ்சாயத்து நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT