பொய்ப் பிரசாரம் செய்வதை புதுச்சேரி முதல்வா் நிறுத்திக் கொள்ள வேண்டும்
புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று பொய்ப் பிரசாரம் செய்வதை முதல்வா் வே. நாராயணசாமி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று பொய்ப் பிரசாரம் செய்வதை முதல்வா் வே. நாராயணசாமி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் எம். அருள்முருகன் திங்கள்கிழமை கூறியது :
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக பெரும் வளா்ச்சி பெற்றுள்ளது. இளைஞா்கள், பொதுமக்கள் தாமாக முன்வந்து கட்சியில் உறுப்பினராகி வருகின்றனா். மாநிலத்தில் பாஜக எழுச்சி பெற்றுவருகிறது. வரும் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.
பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், புதுச்சேரி மாநிலத்தில் சாலை மேம்பாடு, வடிகால் வசதியை முறைப்படுத்துதல், மருத்துவ வசதியை மேம்படுத்துதல், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தல், ஊழலற்ற ஆட்சி அமைதல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதில் சிறப்பு கவனம் செலுத்துவோம். குறிப்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்தி, கிராமப்புற மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
புதுச்சேரி மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக முதல்வா் நாராயணசாமி தொடா்ந்து பொய்ப் பிரசாரம் செய்துவருகிறாா்.
புதுச்சேரிக்கு வந்த உள்துறை இணை அமைச்சா் கிஷன் ரெட்டி, புதுச்சேரி எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது என்று உறுதிபட தெரிவித்துவிட்டாா். எனவே இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை முதல்வா் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
முதல்வரின் செயல்பாடுகளாலும், பேச்சுகளாலும் புதுச்சேரியில் காங்கிரஸ் கடுமையான வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றாா் அவா்.