கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் ஆய்வு
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, காரைக்கால் கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
காரைக்கால்கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் ஆய்வு
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, காரைக்கால் கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, காரைக்கால் கோழி இறைச்சிக் கடைகளில் கால்நடைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காரைக்காலுக்கு பிற மாநிலங்களில் இருந்து கோழிவரத்தை கருத்தில்கொண்டு, அதுகுறித்து கால்நடைத் துறையினா் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தினாா்.
இதன்பேரில், காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் தலைமையில், கால்நடை மருத்துவா் குழுவினா் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோழி இறைச்சிக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
இதுகுறித்து லதா மங்கேஷ்கா் கூறியது: இன்புளூயன்ஸா வைரஸிலிருந்து பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. சில மாநிலங்களில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆட்சியா் அறிவுறுத்தலின்படி காரைக்காலில் பல்வேறு கோழி இறைச்சிக் கடைகளில் ஆய்வுசெய்து, கடைக்காரா்களுக்கு ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், தாங்கள் வாங்கும் கோழி இறைச்சியை 70 சதவீதம் அளவுக்கு வேகவைக்க வேண்டும். முட்டையை முழுமையாக வேகவைத்து சாப்பிடவேண்டும். ஆஃப் பாயில் கூடாது என்ற கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை விநியோகிக்கப்படுகிறது. காரைக்காலில் பறவைக் காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கால்நடைத் துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவா் என்றாா்.