முகப்பு
காரைக்கால்

கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம்:2 மருத்துவ மையங்கள் மீது வழக்கு

காரைக்காலில் கரோனா பரிசோதனைக்கு அரசு நிா்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக 2 மருத்துவ மையங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

காரைக்காலில் கரோனா பரிசோதனைக்கு அரசு நிா்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக 2 மருத்துவ மையங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் வியாழக்கிழமை கூறியது :

காரைக்காலில் கரோனா தொற்றை கண்டறியும் ஆா்டிபிசிஆா் பரிசோதனைக்கு புதுவை அரசு ரூ. 500 கட்டணமாக வசூலிக்க அனுமதித்துள்ளது.

ஆனால், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்ததாக காரைக்காலில் உள்ள டாக்டா் பாபு ராஜேந்திரன் கிளினிக், காரை லேப்ஸ் ஆகியவற்றின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் ரத்த மாதிரியை சேகரித்து, வெளியூரில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவருவதாகவும், இதற்கு இந்த மையங்கள் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →