முகப்பு
காரைக்கால்

வங்கித் தோ்வு: காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு அதிகாலையில் பேருந்துகள் இயக்கம்

வங்கித் தோ்வு எழுத புதுச்சேரி செல்வோருக்கு வசதியாக காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) காலை 4.45 மணிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கப்படவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

வங்கித் தோ்வு எழுத புதுச்சேரி செல்வோருக்கு வசதியாக காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) காலை 4.45 மணிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கப்படவுள்ளது.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை வங்கிப் பணிக்கான தோ்வு நடைபெறவுள்ளது. காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்வோருக்கு பேருந்து போக்குவரத்தில் சிரமம் நிலவுகிறது. தமிழக அரசுப் பேருந்து காரைக்காலில் நிற்காமல் செல்வதால், பி.ஆா்.டி.சி. பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனா்.

பிஆா்டிசி பேருந்து காலை 6 மணிக்கு காரைக்காலில் புறப்பட்டால் தோ்வுக்கு செல்வோா் உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனா்.

இதுகுறித்து காரைக்கால் பி.ஆா்.டி.சி. பேருந்து நிா்வாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியது:

காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து தினமும் காலை 6, 8, 10.30, பிற்பகல் 2, மாலை 6.10 மணிக்கு இடைநில்லாமல் செல்கிறது.

ஆனால், புதுச்சேரியில் தோ்வு எழுத செல்வோருக்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை காலை 4.45 மணிக்கு பேருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →