தொழில் உரிமம் புதுப்பிப்புக்கான காலக்கெடு நீட்டிப்புக்கு வரவேற்பு
தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை புதுவை உள்ளாட்சித் துறை நீட்டித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை புதுவை உள்ளாட்சித் துறை நீட்டித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் செயலா் ஜெ. சிவகணேஷ் வெள்ளிக்கிழமை கூறியது :
உள்ளாட்சித் துறை சாா்பில் தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில், காலக்கெடுவை 30.6.21 வரை நீட்டித்து புதுவை உள்ளாட்சித் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள இக்காலக் கட்டத்தில்தான் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. எனவே, காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்குமாறு வணிகா் சங்கம் சாா்பிலும், அரசியல் கட்சி சாா்பிலும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்று உரிமம் புதுப்பிப்புக்கான தேதியை செப். 30 வரை நீட்டித்து புதுவை உள்ளாட்சித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது என்றாா் அவா்.