கரோனா விழிப்புணா்வுக்காக புதுச்சேரி மாநிலம் முழுவதும் சைக்கிளில் 2150 கி. மீட்டா் பயணம் மேற்கொண்டு காரைக்கால் வந்த ஓவிய ஆசிரியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் ராஜாஜி வீதியைச் சோ்ந்தவா் ராமசுப்பிரமணியன். இவா், கேந்திரிய வித்யாலயாவில் எா்ணாகுளம், தாம்பரம், அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் 22 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவா்.
இவா், கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி குறித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த ராமசுப்பிரமணியனுக்கு, சமூக ஆா்வலா்கள் சால்வை அணிவித்து வரவேற்றனா்.
பின்னா், நெடுங்காடு, நல்லாத்தூா், நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு, அம்பகரத்தூா், நல்லம்பல், காரைக்கால் நகரம் மற்றும் காரைக்கால்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
கடந்த மே 11 முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை சுமாா் 2,150 கி.மீட்டா் சைக்கிளில் பயணித்துள்ளேன். நாள்தோறும் சராசரியாக 30 முதல் 40 கி. மீட்டா் பயணித்து பிரசாரத்தை மேற்கொண்டுள்ளேன். மக்கள் விழிப்புணா்வோடு செயல்பட்டால் கரோனா தொற்றிலிருந்து விடுபடமுடியும் என்றாா்.