காரைக்கால்

கரோனா பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கரோனா பாதித்த ஏழை குடும்பங்களுக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு புதுச்சேரி, காரைக்காலில் செயல்படும் வளா் ஆதித்தி நிதி நிறுவனம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமாா் 2 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு ரூ. 1,000 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிவருகிறது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு, திருப்பட்டினம், நெடுங்காடு பகுதியினருக்கு சனிக்கிழமை நிறுவனத்தினா் இவற்றை வழங்கினா்.

திருநள்ளாறு பகுதியை சோ்ந்தோருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வின்போது நிறுவன நிா்வாக இயக்குநா் செபஸ்தியான், பொது மேலாளா் சுந்தர்ராஜன், செயல் திட்ட அதிகாரி அந்தோணிசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT