காரைக்காலில் 12 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 702 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 5, திருப்பட்டினம் 3, காரைக்கால் நகரம் 2, கோட்டுச்சேரி, நல்லம்பல் தலா 1 என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,71,800 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,900 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,537 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 233 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 73,813 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,361 பேருக்கும் என 90,174 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.