காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சாதனங்கள்
பிரான்ஸ்வாழ் இந்தியா்கள் சாா்பில் காரைக்கால் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகத்துக்கான சாதனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பிரான்ஸ்வாழ் இந்தியா்கள் சாா்பில் காரைக்கால் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகத்துக்கான சாதனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்காலை பூா்வீகமாகக் கொண்டு பிரான்ஸ் நாட்டில் வாழ்பவா்கள், சேவை அமைப்பு சாா்பில் அங்குள்ளோரிடம் நிதி வசூலித்து, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.68 லட்சம் மதிப்புள்ள 3 ஆக்சிஜன் கான்சென்டேட்டா்கள் வாங்கப்பட்டு, மாவட்ட நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இந்த சாதனங்களை காரைக்கால் பிரெஞ்சுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரின் செயலா் புஷ்பநாதன் ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் ஒப்படைத்தாா்.
நிகழ்வில் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு கலந்துகொண்டாா்.