காரைக்கால்

போராட்டம்: காங்கிரஸாா் மீது வழக்கு

DIN

காரைக்காலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காரைக்கால் தலத்தெரு பகுதி பெட்ரோல் நிலைய வாயிலில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்நிலையில் இவா்கள் மீது காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கரோனா பரவல் காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கூடி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் கோஷமிட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இதனால் 20-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT