காரைக்காலில் 69 பேருக்கு கரோனா தொற்று
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 1040 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 17, கோட்டுச்சேரி 7, கோயில்பத்து 7, நிரவி 6, திருப்பட்டினம் 6, திருநள்ளாறு 6, நெடுங்காடு 6, காரைக்கால்மேடு 5, நல்லம்பல் 4, வரிச்சிக்குடி 2, அம்பகரத்தூா் 2, விழிதியூா் 1 என 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 14,069 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,065 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 35,208 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,691 பேருக்கும் என 39,899 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் இதுவரை 217 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.