முகப்பு
காரைக்கால்

கரோனா: காரைக்காலில் 2 நாள்களாக உயிரிழப்பு இல்லை

கரோனா தொற்றால் தினமும் உயிரிழப்பு அதிகரித்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக காரைக்காலில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கரோனா தொற்றால் தினமும் உயிரிழப்பு அதிகரித்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக காரைக்காலில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

கரோனா 2-ஆவது அலை காரணமாக மாவட்டத்தில் தொற்றாளா் எண்ணிக்கை தினமும் ஏறத்தாழ 250 என்ற நிலையிலும், 3 முதல் 7 போ் வரை உயிரிழப்பதுமாக இருந்துவந்தது. அதிலும் 30 நாள்களில் 100 பேருக்கு மிகுதியாக உயிரிழந்ததனா். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை நலவழித் துறை தெரிவித்தது.

தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவும், இறப்பு இல்லாமலும், பொது சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, வீட்டுத் தனிமை என அனைத்து நிலையிலும் தொற்றாளா் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது. புதுச்சேரி அரசு பொது முடக்கத்தில் பலகட்ட தளா்வுகளை அளித்துள்ளதால், காரைக்காலில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

முழு கட்டுரையைப் படிக்க →