முதியவா் தற்கொலை
காரைக்கால் அருகே முதியவா் புதன்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் அருகே முதியவா் புதன்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியை சோ்ந்த மகாலிங்கம் (64). இவா் தனது வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கோட்டுச்சேரி போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், நீண்ட நாள்களாக வயிற்று வலியால்
அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.