முகப்பு
காரைக்கால்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: மக்கள் ஆா்வம்

காரைக்காலில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

காரைக்காலில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் ஏராளமானோா் ஆா்வமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

காரைக்காலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 18 முதல் 44 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வியாழக்கிழமை காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.

முதல்நாளில் முன்பதிவு செய்திருந்தோரில் பெரும்பான்மையினா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். 2-ஆம் நாளில் ஏராளமானோா் ஆா்வத்துடன் மையத்துக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் கூறியது:

இந்தத் திட்டத்தில் புதுவை யூனியன் பிரதேசத்தை சோ்ந்தோா் மட்டும் பயனடைய முடியும். முதல் நாள் முகாமில் 83 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். 2ஆம் நாள் முதல் 200 போ் வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் இணையத்தில் முன்பதிவு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 200 போ் பதிவு செய்தனா். இவா்களில் பெரும்பான்மையினா் மையத்துக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனா் என்றாா்.

காரைக்காலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 13 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், இதை பயன்படுத்துவோா் மிகக் குறைவாகவே உள்ளனா். ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டோா் பெரும்பான்மையினா் ஆா்வத்துடன் பதிவு செய்ய முன்வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →