2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!
தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல் விவரம் தொடர்பாக...
எதிர்வரும் தமிழக பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் செலவு கணக்கை கண்காணிப்பதற்கு வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் உணவு பொருள்களின் விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், 2 இட்லி - ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350, டீ - ரூ. 12, காபி - ரூ. 18 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய விலைப்பட்டியல் அடிப்படையிலேயே தேர்தல் செலவீனம் கணக்கிடப்படும். தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கு ஒற்றைச்சாளர முறைப்படி இணைய வழியில் (சுவிதா எனும் செயலியில்) 48 மணி நேரத்துக்கு முன்பு விண்ணப்பித்து குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடத்துவதற்கு அனுமதி பெறலாம்.
Advertisement
Advertisement
பிரசாரத்தின்போது சாப்பாடு வழங்கினால் அது எந்த வகை உணவு என்பதைப் பொறுத்து அதற்கான செலவு பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவின விலைப்பட்டியல் விவரம்:
அதன்படி அசைவ உணவு - ரூ.350, சைவ உணவு - ரூ.110, வெஜ் பிரியாணி - ரூ.50, வெரைட்டி ரைஸ் - ரூ.45, இட்லி (2 மட்டும்) - ரூ.40, சப்பாத்தி, பூரி ( 2) - ரூ.60, பொங்கல் - ரூ.50, வடை - ரூ.15, மினரல் வாட்டர் - ரூ.15, மட்டன் பிரியாணி - ரூ.180, சிக்கன் பிரியாணி - ரூ.110, டீ - ரூ.12, காபி - ரூ.18 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7, வெஜிட்டபிள் உணவு மற்றும் வெரைட்டி ரைஸ் பாக்ஸ் ரூ.50, ஸ்நாக்ஸ் (உலர் பழம் தவிர்த்து) 100 கிராமுக்கு ரூ.50, இனிப்பு 100 கிராம் ரூ. 90 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல வாகனங்களுக்கும் பிரசார செலவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு பிளாஸ்டிக் இருக்கை ஒன்றுக்கு வாடகை ரூ.11, மேஜைக்கு வாடகை ரூ.110, குஷன் இருக்கைக்கு ரூ.165, தனி சோபாவுக்கு ரூ.380 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்சிக் கொடிக்கு... எட்டுக்கு நாலடி அளவு கட்சிக் கொடி ஒன்றுக்கு ரூ. 40, வாழை மரம் ஒன்று ரூ. 750, பட்டாசு வெடித்தால் ஆயிரம் வாலா-க்கு ரூ. 650, மேள தாளம் 4 மணி நேரம் ரூ. 6,500, குதிரைகளைப் பயன்படுத்தினால் ரூ. 6,000, கரகாட்டம், மயிலாட்டம் என 3 மணி நேரத்துக்கு ரூ.11,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
The Election Commission of India has released a price list to facilitate monitoring of candidates' expenses during election campaigns.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.