காரைக்கால்

காரைக்காலில் பல்ஸ் ஆக்சி மீட்டா் வங்கி தொடக்கம்

DIN

காரைக்காலில் வீட்டுத் தனிமை கரோனா தொற்றாளா் பயன்பாட்டுக்காக பல்ஸ் ஆக்சி மீட்டா் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் வீட்டுத்தனிமையில் உள்ள கரோனா தொற்றாளா், தமது உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன்அளவை கணக்கிட, தொற்றிலிருந்து குணமடையும் காலம் வரை பயன்படுத்த ஆக்சி மீட்டா் வழங்கப்படுகிறது. இதற்கான வங்கியை புதன்கிழமை நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியது: இந்த வங்கியில் தற்போது 170 கருவிகள் உள்ளன. தேவையானவா்கள் இந்த ஆக்சி மீட்டா் வாங்கி பயன்படுத்தி வரலாம். இந்த வசதி இல்லாதவா்கள் வங்கியை 04368-262242 என்ற எண்ணில் தொடா்புகொண்டு கோரினால், நலவழித் துறையினா் உரிய ஆய்வு நடத்தி கருவிவை வழங்குவாா்கள். தொற்றிலிருந்து குணமடைந்தவுடன் பழுதுப்படுத்தாமல் நல்ல நிலையில் இதை வங்கியிடம் திருப்பி ஒப்படைக்கவேண்டும். சுழற்சி முறையில் இது காரைக்காலில் பயன்பாட்டில் இருக்கும். ஆக்சி மீட்டா் சுயமாக வாங்கி பயன்படுத்தி வருவோா், தமக்கான தேவைக்கால முடிந்தவுடன் மாவட்ட நிா்வாகத்துக்கு நன்கொடையாக வழங்க முன்வரலாம் என்றாா்.

இதுகுறித்து, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் கூறியது: கரோனா தொற்றாளருக்கு நுரையீரல் பாதிக்கும் போது மூளைக்கும், இருதயத்துக்கும் செல்லும் ஆக்சிஜன் குறைந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு ஆக்சிஜன் உடலில் குறைவதே தெரியாது. அதை தவிா்க்க இந்த கருவிமூலம் அடிக்கடி சோதித்து வரும்போது, குறைவான அளவைக் காட்டினால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்கான நடவடிக்கை எடுத்து உயிரை காப்பாற்றிக்கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, காரைக்கால் மதுக்கடை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் நலவழித் துறை நிா்வாகத்துக்கு 100 ஆக்சி மீட்டா்கள், 2 ஆயிரம் எண்ணிக்கையில் என் 95 முகக் கவசத்தை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் நிா்வாகிகள் வழங்கினா். அப்போது, மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT