காரைக்காலில் 208 பேருக்கு கரோனா: 5 போ் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 208 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. 5 போ் உயிரிழந்தனா்
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 208 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. 5 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 956 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 60, நல்லம்பல் 9, நெடுங்காடு 24, திருநள்ளாறு 27, திருப்பட்டினம் 19, கோயில்பத்து 14, நிரவி 20, வரிச்சிக்குடி 16, கோட்டுச்சேரி 6, விழிதியூா் 3, அம்பகரத்தூா் 4, காரைக்கால்மேடு 4, நல்லாத்தூா் 2 போ் என மொத்தம் 208 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,31,527 பரிசோதனை செய்யப்பட்டதில் 12,060 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 9,813 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநள்ளாற்றை சோ்ந்த 65 வயது ஆண் மற்றும் 73 வயது பெண், கோயில்பத்தை சோ்ந்த 65 மற்றும் 66 வயது பெண்கள் இருவா், காரைக்கால் நகரைச் சோ்ந்த 69 வயது ஆண் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுக்கு சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்தது.
இதுவரை கரோனா தொற்றால் 169 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 23,465 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,428 பேருக்கும் என 27,893 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.