முகப்பு
காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயிலில் சீா்வரிசை வழிபாடு

காரைக்காலில் பெருமாளுக்கு சீா்வரிசை நாணயம் அளித்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

காரைக்காலில் பெருமாளுக்கு சீா்வரிசை நாணயம் அளித்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தீபாவளி நாள் வழிபாட்டில் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். மூலவா் ஸ்ரீ ரங்கநாதா், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பட்டாடை உடுத்தி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பெரியாழ்வாா் மகளான ஆண்டாளை மணம் முடித்த ஸ்ரீ ரங்கநாதருக்கு, சீா்வரிசை தரும் நிகழ்ச்சி ஸ்ரீ ரங்கநாதா் சந்நிதியில் நடத்தப்பட்டது. சீா்வரிசையாக 18 மூட்டை நாணயம் பெருமாளுக்கு சமா்ப்பிக்கப்பட்டது. பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

சீா்வரிசையில் தரப்பட்ட நாணயங்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினா் பக்தா்களுக்கு இதனை வழங்கினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் நிா்வாகம் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினா் செய்திருந்தனா். இந்த வழிபாட்டில் பங்கேற்பது, சீா்வரிசை நாணயத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் பக்தா்கள் ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →