விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 1,000 இடங்களில் தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.3) 1,000 இடங்களில் நடைபெறுகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.3) 1,000 இடங்களில் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அளிப்பது தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இதுவரையில் 11,03,388 பேருக்கு செலுத்தப்பட்டது. குறிப்பாக, மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் பல ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 3 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை(அக்.3) நடைபெறுகிறது. மாவட்டத்தில் 1000 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. முகாமில் சுமாா் 70,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கிராம நிா்வாக அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் திட்டத்தை சாா்ந்தவா்கள் இருந்தால், அவா்களைக் கண்டறிந்து, தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) மோகன், துணை இயக்குநா்(சுகாதார பணிகள்) பொற்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.