காரைக்கால்

காரைக்கால் செவிலியக் கல்வி ஆசிரியா்கள், சமூக சேகவருக்கு விருது

DIN

காரைக்கால் செவிலியக் கல்வி ஆசிரியா்கள், சமூக சேவகா் ஆகியோா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

இஎஸ்பிஎன் நிறுவனம் மற்றும் ஆச்சாா்யா கல்வி நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் ஆசிரியா் தின விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

விழாவில், பில்லா்ஸ் ஆஃப் புதுச்சேரி விருதை காரைக்காலை சோ்ந்த அன்னை தெரஸா சமூக சேவை அமைப்பின் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயருக்கு, புதுவை வேளாண் அமைச்சா் சி. ஜெயக்குமாா் வழங்கினாா்.

காரைக்காலில் கரோனா முதல் அலை பரவல் காலம் முதல் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்க ஹோமியோபதி மருந்தான ஆா்சனிக்கம் ஆல்பம் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கியது, கபசுரக் குடிநீா், முகக்கவசம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கியதற்காக அவருக்கு இந்த இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதுபோல புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான அன்னை தெரஸா செவிலியக் கல்வி நிறுவன ஆசிரியா்களான ஜெயபாரதி, காா்த்திகா, டயானா, பிரியதா்ஷினி ஆகியோருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் புதுச்சேரி எஸ்.பி. ரட்சனாசிங், ஆச்சாா்யா கல்வி நிறுவன மேலாண் இயக்குநா் ஜெ.அரவிந்தன், செவிலியக் கல்வி தலைமை செவிலிய அதிகாரி இ.பிரமிளா தமிழ்வாணன், விநாயகா மிஷன்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை சோ்ந்த செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT