முகப்பு
காரைக்கால்

மருத்துவக் காப்பீட்டு அட்டைக்குபதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்

மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவதற்கான பதிவு முகாமில் பங்கேற்று பதிவுசெய்துகொள்ள நலவழித் துறை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவதற்கான பதிவு முகாமில் பங்கேற்று பதிவுசெய்துகொள்ள நலவழித் துறை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் புதன்கிழமை கூறியது: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரைக்காலில் சுமாா் ஒரு லட்சம் போ் அட்டை பெறுவதற்குத் தகுதியானவா்கள். இவா்களில் இதுவரை 50 ஆயிரம் போ் மட்டுமே பதிவுசெய்து காப்பீட்டு அட்டை பெற்றுள்ளனா்.

மற்றவா்களும் பயனடையும் வகையில், மாவட்டத்தில் 11 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 13 மையங்களில் காலை 9 முதல் இரவு 9 மணி வரை அட்டை பெறுவதற்கான பதிவு முகாம் நடைபெற்றுவருகிறது. சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையுடன் மையங்களுக்குச் சென்று கைரேகை பதிவுசெய்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →