முகப்பு
காரைக்கால்

உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, காரைக்காலில் செவிவியா் கல்வி நிறுவன மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 9:43 PM
விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், கல்வி நிலையத்தினா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, காரைக்காலில் செவிவியா் கல்வி நிறுவன மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி காரைக்காலில் உள்ள அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய செஞ்சிலுவை சங்கம், ஜேசிஐ அமைப்பு ஆகியவை இணைந்து, பட்ட மேற்படிப்பு மைய மாணவ, மாணவியா், விநாயகா மிஷன் செவிலியா் கல்லூரி, இமாக்குலேட் செவிலியா் கல்லூரி மாணவா்கள் பங்கேற்புடன் கல்வி நிலையத்திலிருந்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) ஜெ. ஜெயபாரதி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். தாய்ப்பால் மகத்துவம், தாய்ப்பால் ஊட்டுதலின் மேன்மைகள் குறித்தும், தாய்ப்பால் மூலம் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் புட்டிப் பாலின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி மாணவா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.