காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (டிச.10) நடைபெற இருந்த புதுவை ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் மாண்டஸ் புயல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.