காரைக்கால்

அங்கன்வாடி ஊழியா்கள் 8-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

DIN

நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்கக் கோரி, காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்கள் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 5 மாத ஊதிய நிலுவை உள்ளதாகவும், நிலுவை ஊதியத்தை வழங்கவும், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலக வாயிலில், ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்திவருகின்றனா். இப்போராட்டம் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக தொடா்ந்தது.

அங்கன்வாடி ஊழியா் சங்க தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியா்களை வியாழக்கிழமை, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச்செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், துணைத் தலைவா் தமிழ்வானன் ஆகியோா் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT