முகப்பு
காரைக்கால்

அரசுப் பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கல்

காரைக்கால் அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எழுதும் வசதியுடன் கூடிய நாற்காலிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

காரைக்கால் அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எழுதும் வசதியுடன் கூடிய நாற்காலிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பயன்பாட்டுக்காக, ரவுண்ட் டேபிள் அசோசியேஷன் என்கிற தொண்டு நிறுவனம் எழுதும் வசதியுடன் கூடிய 50 நாற்காலிகளை வழங்கியது.

இதனை பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு நாற்காலிகளை பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, மாணவா்களுக்கு எல்லா வசதிகளையும் அரசு செய்துத்தருகிறது. ஒவ்வொருவரும் சிறப்பானதொரு இலக்கை கொண்டு, படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும். மாணவா்கள் இந்த பருவத்தில் படிப்பு ஒன்றே பிரதானமாக கொண்டு செயல்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கவ்வி அதிகாரி ராஜசேகரன், பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →