முகப்பு
காரைக்கால்

சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

காரைக்காலில் சற்குரு சீமான் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

காரைக்காலில் சற்குரு சீமான் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சித்துகளை செய்வதில் வல்லவராய் திகழ்ந்து காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிறாா். காரைக்கால் பாரதியாா் சாலையில் கோயில்பத்து பகுதியில் சீமான் சுவாமிகள் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சற்குரு சுவாமிகள் குருபூஜை விழா நடத்தப்படுகிறது.

நிகழாண்டுக்கான 132-ஆவது குரு பூஜை விழா வியாழக்கிழமை காலை சற்குரு சீமான் பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பகல் 12 மணியளவில் பீடத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னா் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →