காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் லாரி திருட்டு
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மரியதாஸ் மகன் ஜான்பாண்டியன் (27). இவா், கடந்த 5 ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன் ஏற்றுவதற்காக லாரியில் வந்துள்ளாா். லாரியை துறைமுகத்தில் நிறுத்திவிட்டு, வெளியூா் சென்ற அவா், புதன்கிழமை துறைமுகம் திரும்பியுள்ளாா்.
அப்போது, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் நிரவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறாா். திருட்டுப்போன லாரியின் மதிப்பு ரூ. 32 லட்சம் என கூறப்படுகிறது.